Tuesday, June 27, 2006

Day 23 - Kaadhal konjam....

As usual, I am so busy with no work. So blogging.
எனக்கு ஒரு ஆசை... நல்லா இருக்குற தமிழ் பாடல்களின் மெட்டுல நாமளும் பாட்டு எழுதணும்னு. ஒரு பாட்டு கூட சரியா எழுத முடியல. அதனால Leo da Mirciயோட கவிதை தொகுப்பில் இருந்து ஒரு பாட்டு, நான் எழுத நினைச்சது போல...


(பாடல் - என் மேல் விழுந்த மழைத்துளியே - மே மாதம்)



நீ காதலைச் சொன்ன மறுகணமே
சுவாசிக்கக் கூட மறந்திடுவேன்
நம் இதயம் இணைந்த நொடிப்பொழுதில்
புதிதாய் பூமியில் பிறந்திடுவேன்


உன் பார்வை பட்ட பனித்துளிகள்
பருகியே நானும் வாழ்ந்திடுவேன்
உன் பாதம் தொட்ட இடமெல்லாம்
இரவினில் சென்று வசித்துடுவேன்
உன் கைவிரல் தீண்டிய காற்றைத்தான்
வாழும் வரைக்கும் சுவாசிப்பேன்


நீ கண்கள் மூடி திறக்கும் முன்பு
பூக்களால் பூமியை நிரப்பிடுவேன்
உன் சேலை உரசிய மலரெடுத்து
ஓவியங்கள் நான் வரைந்திடுவேன்
உன் இதயம் துடிக்கும் இசையெடுத்து
ஓவியங்களுக்கு உயிர் கொடுப்பேன்
உன் உதடுகள் சிந்திய சொல்லெடுத்து
உயிருக்குள் காதலை எழுதிடுவேன்


நீ காதலை மறுத்தால் மறுகணமே
சுவாசிக்க நானும் மறந்திடுவேன்
நீ இல்லை என்று சொல்லி விட்டு
இமைக்கும் முன்பே இறந்திடுவேன்


உன் கைவிரல் தீண்டிய காற்றில் நான்
உணர்வுகளாக உறைந்திருப்பேன்
உன் சேலை உரசிய மலரெடுத்து
என் உணர்வுகளுக்கொரு உடல் வரைவேன்
உன் இதயம் துடிக்கும் இசையெடுத்து
என் உடலுக்கு நானே உயிர் கொடுப்பேன்
உன் உதடுகள் சிந்திய சொல்லெடுத்து
உன் உயிருக்குள் காதலை எழுதிடுவேன்


எத்தனை முறை நான் இறந்தாலும்
மீண்டும் உனக்காய் அவதரிப்பேன்
எத்தனை முறை நான் உயிர்த்தாலும்
உனை மட்டும் தானே காதலிப்பேன்

Leo da Mirci.

Will soon come up with a crazy blog. Or some crazy kavithais...

3 comments:

Anonymous said...

hey Ashok, are you an IIM graduate??awesome man...btw, what are you doing now??

Anonymous said...

Wish I could read tamil.

Anonymous said...

Best regards from NY! sl 500 mercedes http://www.certificate-nursing-school-and-ohio-online.info/lipitor.html Premiums gold travel insurance cisco security what+do+credit+scores+mean Good credit score 695